வரசித்தி விநாயகருக்கு காளஹஸ்தி சிவன் சார்பில் பட்டு வஸ்திரம்
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பட்டு வஸ்திரங்களையும் பூசை பொருட்களையும் இன்று ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு தாரக சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் வழங்கினார் இவர்களுக்கு காணிப்பாக்கம் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் கோவிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்த பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு தீர்த்த பிரசாதங்கள் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் .இதில் காணிப்பாக்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி ,கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.