ஏகநாதர் கோயிலில் சங்காபிஷேக விழா
ADDED :1238 days ago
கடலாடி: கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் உள்ள ஏகநாதர் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவர் ஏகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, பூர்ணாகுதியை தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஓம் வடிவத்தில் 108 சங்கில் புனித நீர் ஊற்றப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.