உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ஓணம் பண்டிகை: பக்தர்கள் கூட்டம்

பழநியில் ஓணம் பண்டிகை: பக்தர்கள் கூட்டம்

பழநி: பழநியில் ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கேரள பக்தர்கள் அதிக அளவில் மலைக் கோயிலுக்கு வந்தனர். பழநியில் கேரளா பக்தர்கள் வருகை அதிகரித்ததுள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து பக்தர்கள் மலைக் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தனர். இதனால் பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !