உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவந்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்

பூவந்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில் பூவந்தி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேரையூரில் பிடிமண் வழங்கப்பட்டது. பின்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.குதிரைஎடுப்பு விழாவை முன்னிட்டு பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் அலகுவேல் குத்தி முக்கிய வீதியில் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள் முனியங்கோயிலில் இருந்து ஊர்வலமாக தூக்கி கொண்டுவரப்பட்டு கிராமத்தில் வைக்கப்பட்டது. பின்பு கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.குதிரை, தவளும் பிள்ளைகள் கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பூவந்தி அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள்,தீபாரதனை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமத்தின் சார்பில் நாடகம் நடந்தது.ஏற்பாடுகளை கண்டிலான் கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !