உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரத்தில் நவராத்திரி கொலு விழா நான்காம் நாள் சிறப்பு பூஜை

சிவாலயபுரத்தில் நவராத்திரி கொலு விழா நான்காம் நாள் சிறப்பு பூஜை

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு விழா நான்காம் நாள் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 03.15 மணிக்கு, திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு கோமதி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. நவராத்திரி நான்காம் நாளான, இன்று தட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் கோமதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு  சுண்டல் கடலை மற்றும் அவித்த தானியங்கள் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !