உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரமோற்ஸவம் ஒன்பதாம் திருநாளில் பெரிய திருவோணத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது.

நேற்று காலை கோயிலில் இருந்து பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி செப்பு தேருக்கு எழுந்தருளினர். ரகுபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். காலை 07:31 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோபாலா  கோசத்துடன் செப்பு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். யானை முன் செல்ல 45 நிமிடங்களில் ரத வீதி சுற்றி வந்து தேர் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில்  தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், மணியம் ஸ்ரீராமன், கோபி மற்றும் கோயில் பட்டர்கள், குருநாத சம்பந்த ஹிந்து மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !