உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல் க்கு அபிஷேகம் இல்லை

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல் க்கு அபிஷேகம் இல்லை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இன்று (அக்.14) வேல் மலைக்கு கொண்டு செல்வதால் ஒரு நாள் மட்டும் வேலுக்கு அபிஷேகம் இல்லை. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலையின் அடிவாரத்தில் குடைந்து மூலவர் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கொண்டு வரும் பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் மூலவர் கரத்தில் உள்ள தங்கவேலுக்கே நடக்கிறது. மலைமேல் குமரர் விழாவை முன்னிட்டு வேல் மழைக்கு கொண்டு செல்லப்படுவதால் இன்று மட்டும் வேலுக்கு அபிஷேகம் இல்லை. அக். 15 அதிகாலை முதல் வழக்கம்போல் வேலுக்கு அபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !