உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் மற்றும் பண்ணக்காடு சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திவிழா மற்றும் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. தொடர்ந்து விளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவுகள் நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக கொடைக்கானல் குறிஞ்சி யாண்டவர் கோயிலிலும் விழா சிறப்பாக நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !