பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் பால்குட விழா
ADDED :3 hours ago
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது. ஆக. 9ல் விழா துவங்கி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று காலையில் பால்குடம், அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெருமாள் கோயில் படித்துறையில் இருந்து பெரிய பஜார் உள்ளிட்ட வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். பல்வேறு திரவியங்கள், பழச்சாறு மற்றும் பாலாபிஷேகம் செய்து அம்மன் அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.