ராமநாதபுரத்தில் பசுமை விநாயகர் சிலைகள்
ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பசுமை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. செப்.15 ல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், பரமக்குடி ஆகிய இடங்களிலும், ராமநாதபுரம், தேவிப்பட்டினம், சாயல்குடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும். நடப்பாண்டில் தமிழர் பண்பாட்டையும், ஹிந்து சனாதன தர்மத்தையும் ஒன்றிணைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக ரெகுநாதபுரத்தில் 3 முதல் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகள் மரக்கூழ், பேப்பர் கூழ், மரத்துாள், மரவல்லிகிழங்கு ஆகிய பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சிலைகள் எளிதில் கரையக்கூடிய, மீன்களுக்கு உணவாகும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு வாட்டர் பெயிண்ட் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.