உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேக, வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலை வலக்காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, நேற்று இரவு 7:00 மணிக்கு மூலவர் சக்திவேல் முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !