இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1092 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதுக்கு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் கால பைரவருக்கு சிவாச்சாரியார் தர்மராஜ் சிவம் சிறப்பு பூஜை நடத்தினார். கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.