ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
நாகர்கோவில்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைபுரத்து மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்,
நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றிய பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தாலும் பக்தர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி, நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின் கணபதிேஹாமம் நடக்கும். காலை 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின் புதிய மேல்சாந்தி தேர்வுக்கான குலுக்கல் நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் சபரிமலை மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள பத்து பேரில் ஒருவரும், மாளிகைப்புறம் மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள எட்டு பேரில் ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைபுரத்து மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வர். அக்., 22 இரவு வரை பூஜைகள் நடந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அடுத்து ஒரு நாள் இடைவெளியில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக அக்., 24 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 25 ல் பூஜைகள் முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டலகால பூஜைகளுக்காக நவ., 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். மேல்சாந்தி தேர்வு இன்று நடந்தாலும் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இந்த தேர்வை கட்டுப்படுத்தும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.