பேசும் கன்னிமார் கோயிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1080 days ago
அலங்காநல்லூர்: மதுரை காஞ்சாரம்பேட்டை பாரைப்பட்டி பேசும் கன்னிமார் கோயிலில் ஐப்பசி மாத சர்வ அமாவாசை வழிபாடு நடந்தது. உலக மக்கள் நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை செய்தனர். முன்னதாக சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோயிலை தொடர்ந்து ஏழு கன்னிமார் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.