உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் பகுதி சிவாலயங்களில் ஐப்பசி சனி பிரதோஷ விழா

நத்தம் பகுதி சிவாலயங்களில் ஐப்பசி சனி பிரதோஷ விழா

நத்தம், நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஐப்பசி மாத சனி பிரதோஷ விழா பூஜைகள் நடந்தது.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷ விழா பூஜையில் நந்தீஸ்வரருக்கு பால், பழம், பன்னீர், இளநீர்,சந்தனம், விபூதி ,புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் நத்தம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைப்போலவே அய்யாபட்டி சிவதாண்டவப்பாறை ருத்ர லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் நடந்தது. வேம்பார்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து வழிபட்டனர். சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோவிலில் ஐப்பசி சனி பிரதோஷ விழாவையொட்டி 1008 சிவலிங்கங்களுக்கும் புஷ்பங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள சிவசக்தி சித்தர் பீடத்தில் பிரதோஷ விழாவையொட்டி சிவசக்தி அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடந்தது. கணவாய்பட்டி பங்களா சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !