திருப்பரங்குன்றத்தில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு தீர்த்த உற்ஸவம்
ADDED :1325 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படட்டது. பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணபொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு அபிஷேகங்கள் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. கிரகண பூஜை முடித்து இரவு 7:35 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.