உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜடேருத்ரசாமி கோவிலில் தேர்த்திருவிழா : பக்தர்கள் தரிசனம்

ஜடேருத்ரசாமி கோவிலில் தேர்த்திருவிழா : பக்தர்கள் தரிசனம்

ஈரோடு : ஆசனுார் அருகே பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஈரோடு, ஆசனுாரை அடுத்த கேர்மாளம் அருகே உள்ள சிக்குன்சே பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஜடேருத்ரசாமி கோவில் உள்ளது.இங்கு ஆண்டு தோறும் தேர்த்திருவிழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.நடப்பாண்டு திருவிழா நவம்பர் 4ல் எண்ணை மஜ்ஜனம் சேவையுடன் தொடங்கியது.அதைதொடர்ந்து தீப அலங்காரம், பால்குடம் எடுத்தல்,அலகுகுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி உலா நடந்தது. விழாவில் கேர்மாளம், தாளவாடி, ஆசனுார், கெத்தேசால், கோட்டாடை, கடம்பூர், மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், ஹனுார், சாம்ராஜ்நகர், உடையர் பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வியாழன் மறுபூஜையுடன் புலி,யானை உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !