உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா

முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா

ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது. சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய்கிழமை வெகு விமர்சையாக நடந்து வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொடை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு கொடைவிழா இன்று நடக்கிறது. இன்று பகல் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை, அன்னதானம், இரவு 9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து வாணம் மத்தாப்பு வேடிக்கை சிறப்பு சிங்காரி மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன்நகர் உலா செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு திரைப்பட இன்னிசை கச்சேரி, மிமிக்ரி, மேஜிக், நகைச்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. கொடைவிழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !