பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா
ADDED :1214 days ago
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர் மகா பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா நேற்று முன்தினம் நடந்தது. திம்மநாயக்கன் புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இப்பகுதியில் இக்கோவிலில் மட்டுமே பைரவர் வடக்கு இருந்து காட்சியளிப்பது சிறப்பாகும். இங்கு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு ஜென்மாஷ்டமி விழா துவங்கியது. பைரவருக்கு முதல் முறையாக 108 கிலோ மலர்களால் பூஜை செய்து அலங்காரம் செய்யப்பட்டது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை மற்றும் வேள்வி பூஜை நள்ளிரவு வரை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர், புளியம்பட்டி, சேவூர் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.