திருப்பரங்குன்றத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
ADDED :1007 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா ஆறாம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகினர்.சைவ சமய வரலாற்று லீலை; வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவலிநாயகர், திருஞானசம்பந்தர் புறப்பாடாகி 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார். தீபாராதனைக்கு பின்பு சுவாமிகள் ரதவீதிகளில் புறப்பாடாகி அருள்பாலித்தனர்.