திருவண்ணாமலை தீப திருவிழா 9ம் நாள்: புருஷா முனி வாகனத்தில் சுவாமி உலா
ADDED :1040 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஒன்பதாம் நாள் தீப திருவிழாவில் நேற்று, புருஷாமுனி வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவின், ஒன்பதாம் நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு, மூஷிக வாகனத்தில் விநாயகர், புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரர் (உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம்) அலங்கரிக்கப்பட்டு மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.