உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்திர சுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வீரபத்திர சுவாமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, வீரபத்திர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம்,  எம்.சி.பள்ளி கிராமத்தில், குருமன்ஸ் பழங்குடி மக்கள் வழிபடும் வீரபத்திரசுவாமி கோவில் உள்ளது.

இங்கு, மைலேரி மல்லேஸ்வர சுவாமி, வீரபத்திர சுவாமி, நீலகிரி சுவாமி, சித்தப்ப சுவாமி புதிய உற்சவர் ஸ்தாபன மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 13ல் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. விழாவின்  முக்கிய நாளான நேற்று காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு பூஜைகளுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி அழைத்தல், பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். மாலை, 5:00 மணிக்கு,உற்சவ மூர்த்திகள்வீதி உலா வந்து,பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !