தினைக்குளத்தில் பேட்டை துள்ளல் விழா
ADDED :1021 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் சக்திவேல் முருகன் கோயில் அருகே ஐயப்பன் குடில் உள்ளது. 13 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடந்தது. தினைக்குளம் காந்தாரியம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் உடலில் வண்ணப் பொடிகளை பூசியவாறும் ஆடிப்பாடி, சரணகோஷமிட்டவாறு வந்தனர். மேதலோடை அருகே உள்ள ஊரணியில் புனித நீராடினர். ஐயப்பன் கோயிலில் அர்ச்சனை, பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது. கருப்பண்ணசாமி வேடம் போட்டு பக்தர்கள் ஆடினர். ஏற்பாடுகளை தலைமை குருசாமி பாலசுப்ரமணியன், செல்வம், சிவா, குப்புசாமி, முருகானந்தம், சாத்தையா சந்திரகுமார் உட்பட ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.