உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை : மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். இந்நிலையில், மார்கழி மாத பவுர்ணமி திதி, நாளை அதிகாலை, 2:26 மணி முதல், 7ம் தேதி அதிகாலை, 4:20 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !