பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.80 கோடி
                              ADDED :1031 days ago 
                            
                          
                           பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3 கோடியே 80 லட்சம் கிடைத்துள்ளது.
பழநியில் மலைக்கோயிலில் ஜன.,5,6ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நேற்று (ஜன.6ல்) காணிக்கையாக 380 கிராம் தங்கமும், 4,283 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. ஒரு கோடியே 84 லட்சத்து 51 ஆயிரத்து 768 மற்றும் 291 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 855 கிராம் தங்கமும், 10 ஆயிரத்து 631 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.3 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரத்து 807, மற்றும் 574 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.