பேரூர் ஆதீனத்தில் நூல் வெளியீட்டு விழா
ADDED :1011 days ago
பேரூர்: பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வினா விடை தொகுப்பு என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், மகம் நாள் சாந்தலிங்கர் மாத குருபூஜை வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தவத்திரு சிதம்பர அடிகளார் நூலகத்தின் சார்பில், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வினா விடை தொகுப்பு என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்நூலை, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் வெளியிட, புரவலர்கள் மஞ்சுராணி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் பெற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூல் வெளியீட்டு விழாவை தொடர்ந்து, பேரொளி வழிபாடும், அன்னம் பாலிப்பும் நடந்தது.