உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத,  தேய்பிறை  அஷ்டமி அருள்மிகு கால பைரவர் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு, அருள்மிகு கால பைரவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. அருள்மிகு கால பைரவர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இன்றைய இறைப் பணியில்  தும்பைப்பட்டியைச் சேர்ந்த சிவ.A.கண்ணதாசன் - சிவ.K.காமாட்சி, சிவ. A. தேவதாஸ் - சிவ.D.வசந்தி, சிவ. A.மோகன்தாஸ் - சிவ.M.ரமா குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம், பைரவர் பதிகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு  தயிர் சாதம்,  அபிஷேக பால், பஞ்சாமிர்தம், உளுந்து வடை பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !