உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிகேசம் காளி அம்மன் கோவிலில் பிப்., 5ல் பவுர்ணமி பூஜை

காளிகேசம் காளி அம்மன் கோவிலில் பிப்., 5ல் பவுர்ணமி பூஜை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த புனித தலமான காளிகேசம் காளிஅம்மன் கோவிலில் பிப்ரவரி 5ம் தேதி பவுர்ணமி பூஜை விழா நடைபெற இருக்கிறது. காலை 7 மணிக்கு பக்தி இசை , 9 மணிக்கு நாதஸ்வர மேளம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உலக நன்மைக்காக அம்மனை வேண்டி பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் ஸ்ரீலிதா சகஸ்ரநாம பூஜை நடை பெறும். மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், அதனை தொடர்ந் து பிரசாதம் வழங்கப்படுகிறது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை காளிகேசம் காளி அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பவுர்ணமி பூஜை வழிபாட்டு குழு நிர்வாகிகளுடன் பக்தர்களும் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !