திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா
ADDED :1034 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோயிலில் பிரம்ம தீர்த்த தெப்பத் திருவிழா நடந்தது.
மண்டகப்படி வந்த சுவாமி சமேதரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடத்தினர். இரவில் வெள்ளி சப்பரத்தில், மின்னொளி அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும் தெப்பத்தில் வலம் வந்து, வீதியுலா வந்தனர். இவ்விழா ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் சேவுகன், செயல் அலுவலர் சரவணன், விழாக் குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.