உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி பரஞ்சோதி சபையில் மாசி அமாவாசை பிரித்தியங்கிரா தேவி யாகம்

ஆதி பரஞ்சோதி சபையில் மாசி அமாவாசை பிரித்தியங்கிரா தேவி யாகம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் மாசி அமாவாசை பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேட்டுக்கடை ஆதி பரஞ்சோதி சகலோக சபையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று கோ பூஜை மற்றும் பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாக பூஜை நடக்கும். இன்று காலை 50ம் மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை மற்றும் உணவுகள் வழங்க கோ பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை மடத்தில் உள்ள யாக சாலையில் நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பிரித்தியங்கிரா தேவி அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார். சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொட்டி பிரத்தியங்கிரா தேவி யாகம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலைகளில் எழுதி மந்திரங்களை ஜபித்தபடி யாக குண்டத்தில் போட்டு பூஜை செய்தனர். இந்த அமாவாசை யாக பூஜைக்கு மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டம் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !