கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மாசி சனி சிறப்பு பூஜை
ADDED :1131 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல், மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள் சிறப்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சனி திசை உள்ள பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டால், அவரது சிரமங்கள் உடனடியாக குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.