சப்த கன்னிமார் கோயிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1068 days ago
பரமக்குடி: பரமக்குடி சப்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் நேற்று மாலை 5:00 மணி தொடங்கி வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு, வெள்ளி கவசம், கிரீடம் அணிவித்து, மஞ்சள் பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனையில் பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
*பரமக்குடி சின்ன கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் மாசி மாதம் வெள்ளிக் கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பரமக்குடி முத்தாலம்மன், திரவுபதி அம்மன், பத்தினி அம்மன் என அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.