உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி பவுர்ணமி : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

மாசி பவுர்ணமி : திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: மாசி மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கானோரும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாசி மகம், பவுர்ணமி தினமான இன்று, மாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !