பழநியில் மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்
ADDED :916 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.பழநி மலைக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமகம் வழிபாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் வெள்ளி சங்கு, உற்பட 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வைக்கப்பட்டது. யாக குண்டத்தின் முன் கும்ப கலசங்களில் நீர் நிரப்பி யாகம் நடைபெற்றது. பூஜையின் சிறப்பு தீபாதாரணை நடந்தது. யாக பூஜை கலசத்தில் உள்ள புனிதநீர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.