பாதாள காளியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :1025 days ago
கடலாடி: கடலாடி பாதாள காளியம்மன் கோவிலில் மாசி பவுர்ணமியை முன்னிட்டு மண்ணால் செய்யப்பட்ட ஒரு அடி உயரம் கொண்ட 5 முக விளக்கில் 504 விளக்கு பூஜை நடந்தது. மூலவர் பாதாள காளியம்மனுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மண்ணால் செய்யப்பட்ட ஒரு அடி உயரம் கொண்ட ஐந்து முக மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் நெய் தீபம் ஏற்றி ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாமாவளி, பஜனை, உலக நன்மைக்கான கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.