உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பட்டினத்தில் மாசிமக திருவிழாவில் சமுத்திரக்கடலில் 6பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருப்பட்டினத்தில் மாசிமக திருவிழாவில் சமுத்திரக்கடலில் 6பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர்.

காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரியில் மாசிமகா திருவிழாவை முன்னிட்டு நிரவி கரியமாணிக்க பெருமாள், திருமருகல் வரதராஜ பெருமாள். திருப்பட்டினம் விழிவரதராஜ பெருமாள், திருப்பட்டினம் ரகுநாத பெருமாள், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள், திருப்பட்டினம் பிரசன்னாவெங்கடேச பெருமாள்.காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள், ரகுநாதர்பெருமாள் உள்ளிட்ட 8பெருமாள் ஆண்டுதோறும் தனித்தனிப் பல்லக்கில் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி கலந்து கொள்ளுவது வழக்கம் ஆனால் இந்தாண்டு நித்தியகல்யாண பெருமாள். ரகுநதர்பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் திருப்பணி நடைபெறுவதால் பெருமாள் தீர்த்தவாரிக்கு செல்லவில்லை இதனால் நேற்று மாலை 4 மணிக்கு மாசிமகத்தையொட்டி பவலக்கால் சப்பரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் தங்க கருடவாகனத்தில் 6பெருமாள் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடந்தது. முன்னதாக அதிதாலை மறைந்த முன்னோர்களுக்கு கடல்கரையில் திதிகொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ. எஸ்.பி சுப்ரமணியன்.பா.ஜ.க.பிரமுகர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்கடல்கரை சூற்றி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் சுடல்கரையில் கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !