தேரில் பவனி வந்த பொங்காளியம்மன் : பக்தர்கள் தரிசனம்
ADDED :1121 days ago
கோவை : குறிச்சிகுளம் கற்பக விநாயகர், நீ பொங்காளியம்மன் கோவில் மாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்மன் தேரில் நகர வீதிகளில் பவனி வந்தார். அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.