உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைகட்டி கரியபண்ட் அய்யன் கோவில் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

ஆனைகட்டி கரியபண்ட் அய்யன் கோவில் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

கூடலூர்: மசினகுடி அருகே உள்ள ஆனைகட்டி ஸ்ரீ மாசி கரியபண்ட அய்யன் கோவில் திருவிழா 26ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.

நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு குண்டத்துக்கு மரம் கொண்டு வரும் நிகழ்ச்சியும்; பகல் 12:00 மணிக்கு சிறியூர் மாரியம்மன் அழைத்து வருதல்; பிற்பகல் 2.30 மணிக்கு ஸ்ரீ கொங்காளி அய்யனை  அழைத்து வரும் நிகழ்ச்சியும்; மாலை 3:00 மணி முதல் 4:00 மணி முடிவெடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7:00 மணி முதல் அய்யன் புலி மேல் பவனி வருதல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. தொடர்ந்து,  நேற்று, காலை, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !