உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் பால்குட விழா

முத்துமாரியம்மன் பால்குட விழா

திருப்புத்தூர்: திருப்புத்தூர் நாகராஜன் நகர் முத்தெடுத்த முத்துமாரியம்மன் கோவில் பால் குட விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் அம்மனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் துவக்கினர்.  தினசரி இரவில் கோயில் முன்பாக கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர். நேற்று காலை மதுரை ரோடு வல்லப விநாயகர் கோயிலிலிருந்து அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து, பால் குடத்துடன் பக்தர்கள்  ஊர்வலமாக புறப்பட்டு கோயில் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !