உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிறம் மாறும் விநாயகர் கோவிலுக்கு சமய வகுப்பு மாணவிகள் ஊர்வலம்

நிறம் மாறும் விநாயகர் கோவிலுக்கு சமய வகுப்பு மாணவிகள் ஊர்வலம்

நாகர்கோவில்: நிறம் மாறும் அதிசய விநாயகர் கோவிலுக்கு, சமய வகுப்பு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, அனைத்து கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்து அமைப்புகள் சார்பில், மாவட்டத்தில், 1,200 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தக்கலை அருகே கேரளபுரத்தில், நிறம் மாறும் அதிசய விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகர், ஆறு மாதம் வெள்ளையாகவும், ஆறு மாதம் கறுப்பாகவும், காட்சி தருகிறார். விநாயகர் நிறம் மாறுவதை பொறுத்து, அங்குள்ள அரச மரமும், கிணற்று நீரும், நிறம் மாறுவதாக நம்பப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட, சமய வகுப்பு மாணவிகள், ஊர்வலமாக, தக்கலை பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, கொல்லன்விளை வேம்படி விநாயகர், கேரளபுரம், அதிசய விநாயகரை தரிசித்தனர். இதில், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, தக்கலை இந்து சகோதர இயக்கம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !