உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

போடி: போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்று விழா அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. தக்கார் மாரிமுத்து, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, முன்னாள் துணைத் தலைவர் சங்கர், அன்னதான அறக்கட்டளை செயலாளர்கள் பேச்சிமுத்து, முத்துராமலிங்கம் பொருளாளர்கள் முத்துராஜ், மகேந்திரன், வர்த்தகர்கள் சங்க தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க., நகர செயலாளர் சேதுராம், மாவட்ட அம்மா பேரவை தலைவர் குறிஞ்சிமணி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி இன்று காலை 7.35 மணியளவில் பெரியாண்டவர் கோயில் சிறப்பு பூஜையுடன் துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் கொண்டு செல்லப்பட்டு காலை 10.15 மணியளவில் அளவில் பரமசிவன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம். தீபாரதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரம் சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் பாலமுருகன் செய்திருந்தார். சித்திரை திருவிழா ஏப்.15 ல் துவங்கி 22 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !