தாலி சரடு அலங்காரத்தில் அலகு மாரியம்மன் அருள்பாலிப்பு
ADDED :1072 days ago
திருப்பூர்: தாராபுரம் ரோடு, டி. எம். சி. காலனி அலகு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா வை ஒட்டி, தாலி சரடு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி, கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபாடு செய்தனர்.