காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டதிற்கு நன்கொடை
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் .இதனால நீண்ட தூரத்தில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் சார்பில் நித்திய அன்னதான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதோடு இதற்காக ஏராளமான பக்தர்கள் தங்கள் காணிக்கை நித்திய அன்னதான திட்டத்திற்காக ஏராளமான பக்தர்கள் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீ காளஹஸ்தியை சேர்ந்த ராகவ் ரெட்டி - உஷா தேவி தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு இடம் வழங்கினார். முன்னதாக இவர்களுக்கு கோயில் சார்பில் சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளை செய்தனர் கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.