அண்ணாமலையார் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி : பக்தர்கள் பரவசம்
ADDED :1026 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் நேர்அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருநீர் நேர்அண்ணாமலையார் மூலவர் மீது ஆண்டுக்கு ஒரு முறை சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.