பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED :910 days ago
பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை தெருவில் அருள் பாலிக்கும் துர்க்கை அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
இக்கோயிலில் 42 வது ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் காலை துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து, சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பின்னர் மாலை 6:00 மணிக்கு பல்வேறு வகையான வண்ண மலர்கள் தட்டுகளில் அலங்கரிக்கப்பட்டு, 9:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பூத்தட்டுகள் கோயிலை அடைந்து அம்மனுக்கு இரவு 10:00 மணி முதல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் இரவு 12:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவில், சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நேற்று காலை 11:00 மணிக்கு பூக்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.