உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகு நாச்சியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அழகு நாச்சியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அவிநாசி: அவிநாசி,கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில்,பொங்கல் பூச்சாட்டு விழாவில்,அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

அவிநாசி,கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவிற்கான காப்புக் கட்டுதல்,நந்தா தீபம் ஏற்றுதல் ஆகியவை கடந்த 11ம் தேதி நடைப்பெற்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவில், 12ம் தேதி புதன்கிழமை முதல் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை காலை,மாலை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல்,பூவோடு எடுத்தல்,மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து நான்கு ரத வீதிகளில் வழியாக வந்தது.அதில் அம்மன் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், ஊர்வலத்தில் பக்தர்கள் 20 அடியில் வேல் மற்றும் கத்தி கொண்டு அலகு குத்தி வந்தனர். பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். நாளை மஞ்சள் நீர்,மஹா அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், அம்மன் திருவீதி உலாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவில் கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !