உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 24ல் தொடக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 24ல் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 24ல் சித்திரை வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை வசந்த உற்சவ விழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி, வரும், 24ல் பந்தக்கால் முகூர்த்தத்துடன் விழா தொடங்குகிறது. அதையொட்டி, அன்று மாலை, 4:00 மணி முதல், மாலை, 5:25 மணிக்குள், கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தாக்கால் முகூர்த்தம் நடக்கும். அதை தொடர்ந்து, 25 முதல், மே, 4ம் தேதி வரை, தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கும். இரவில் சுவாமிக்கு மண்டகப்படியும் நடக்கும். விழாவின் நிறைவாக, வரும், மே, 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படியும் நடக்கும். மேலும், அன்று நள்ளிரவு, 12:00 மணியளவில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில், தங்க கொடிமரம் முன்பு, மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கும். சிவன் கோவிலில் மன்மத தகனம் நடப்பது, அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !