உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மற்றும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அந்த வகையில், இன்று, சித்திரை பிரம்மோற்சவம், காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக, நேற்று முன்தினம் இரவு, விநாயகர் வீதியுலா மற்றும் யாகசாலை பூஜையுடன் விழா துவங்கப்பட்டது. நேற்று, இரவு 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் மே 2ம் தேதி தெய்வாணை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும், மே 4ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவில், உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


உற்சவ நிகழ்ச்சி விபரம்

ஏப்.26 வெள்ளி சூரிய பிரபை பூத வாகனம்
2 7 சிம்ம வாகனம் ஆட்டு கிடாய் வாகனம்
28 பல்லக்குசேவை வெள்ளி நாக வாகனம்
29 அன்ன வாகனம் வெள்ளி மயில் வாகனம்
30 -- புலி வாகனம் யானை வாகனம்

மே 1 மரத்தேர்
2 யாளி வாகனம் தெய்வானை திருக்கல்யாணம்
3 கேடய உலா சண்முகர் உற்சவம்
4 தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம் கொடி இறக்கம்
5 சப்தாபரணம், காதம்பரி விழா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !