சித்ரா பவுர்ணமி: பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1209 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி, சித்திரை வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி, சித்திரை வெள்ளியை முன்னிட்டு, நேற்று (05ம் தேதி) விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.