காளியம்மன் கோயிலில் கிடாய் வெட்டு விழா
ADDED :936 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழை மடல் காளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, கிடாய் வெட்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர், நேர்த்திக்கடனாக பக்தர்கள் கொண்டு வந்திருந்த, 150 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் கோயில் முன்பு பலியிடப்பட்டன. தொடர்ந்து, பக்தர்களுக்கு கறி விருந்து சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அசைவ விருந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிலுகவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.